எங்கள் classன் அந்த அழகிய பெண் rolls சாப்பிடும் styleஐ அப்படியே பார்த்துக்கொண்டு இருக்கலாம். ஒரு மாலை நேரம் அவள் அந்த rollsஐ வாய்க்கருகில் கொண்டு வந்து வாயை மெதுவாக திறந்து சிறிதளவு பாகத்தை மட்டும் மெதுவாக கடித்து அதை அவள் நாவினால் வலதும் இடதுமாக தள்ளி தள்ளி விளையாடி சாப்பிடும்போது பார்த்துக்கொண்டிருக்கும் class பொடியளின் இதயமும் வலதும் இடதுமாக இடம்பெயரும் ஒரு feel.....;)
அந்த கண்கொள்ளாக்காட்சி நடைபெறும் போது நாரசாரமாக ஒரு இடையூறு
“மச்சான்”
”என்னடா”
“நான் அவளுக்கு try ஒன்டு போடலாம் எண்டு இருக்கிறன்”
”யாருக்கு ----கா??”
அவளை இவன் love பண்ணுவது நடவாத காரியம் என்றதாலேயே அதிர்ச்சியுடன் அந்த கேள்வியை கேட்டேன்
“இல்ல மச்சான் அவளுக்கு பக்கத்துல styleஆ eclair சாப்பிடுறாளே”
அவன் சொன்ன திசை நோக்கிப்பார்த்தேன். அழகான பெண்தான் ஆனால் அவள் eclair சாப்பிடுவது discovery channel ல் ஒட்டகம் வெறும்வாயை மெல்லும் போது closeupல் பார்த்திருப்பீர்களே அதைப்போலத்தான் இருந்தது.
“அதுல என்னடா இழவு styleee?” நான் அதிர்ச்சியுடன் கேட்டேன்
”சும்மா இரு”
பிறகு தொடங்கியது படலம் அவன் அவள் detail தேடி அலைந்ததும் class முடிய followபண்ணுவதுமாக அவன் காலத்தை ஓட்டி கடைசியில் காதலை சொல்வதென முடிவெடுத்தான். இங்குதான் நாம் நம்மவர்கள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும், follow பண்ணும்போதும் அவளுக்காக தெருச்சண்டைகளில் இறங்கும்போது உள்ள தைரியம் அவளிடம் காதலை சொல்லப்போகும்போது காணாமல் போய்விடும், காதலைச்சொல்ல அவளருகில் சென்று நாக்குத்தள்ளி இன்னொருநாள் சொல்வோம் என பயத்துடன் திரும்பியவர்கள் ஏராளம், அதனாலேயே அந்நியன் படத்தின் பாடல் வரிகள் “அந்தக்கடவுளை விடவும் பெரியவன் ஒருவன் பூமியிலுள்ளான் எவன்? பெண் கண்களைப்பார்த்துக்காதலை சொல்லும் தைரியமுள்ளவன் அவன்” அவ்வளவு யதார்தத்தைக்காட்டியது :) இவ்வகையான சந்தர்பத்திலேயே நண்பர்கள் தூதுவர்கள் ஆவார்கள். நானும் ஆனேன்
rudra mawatha அவளின்class முடிய மட்டும் wait பண்ணி அவளிடம் சொல்ல வேண்டும். நான் கொண்டுவரப்போகும் resultஐ எதிர்பார்த்து அவன் commercial bank அடியில் காத்திருந்தான், நான் நிற்கும் போது ஒரு seniorவந்து ”என்ன தம்பி இங்க” எண்டான் நான் ஒன்டும் சொல்லாமல் இருக்க “ஆ ஆ விளங்குது ” என்று என்னை பார்த்து சிரித்துவிட்டுப்போனான். அவனும் இப்படி அவன் துண்டுக்கு watchman வேலை பார்க்கவே போய்க்கொண்டிருப்பான், இருந்தும் ஒரு நக்கல் ஏதோ அவன் படிக்கப்போகிற மாதிரி. class முடியும் நேரம், நான் விறு விறு என pucக்குள் போய் அவள் class அடியில் நின்றேன் (roadல் இருந்து இந்த riskஆன வேலை பார்க்க முடியாது தெரிந்தவர்கள் வந்தால் அவமானம்)
class முடிந்து அவள் தோழிகளோடு வந்தாள்
“excuse me”.
"என்ன??"
“erm ....வந்து என்ட friend உங்களை love... ”
"யாரு friend??"
”-----”
“ஏன் இதை அவர் வந்து சொல்லமாட்டாரோ”
என்னிடம் அதற்கு விடையில்லை நான் அவள் முகத்தைப்பார்த்தேன்
“இல்லை அவன் கொஞ்சம் seriousஆ”
“hospitalல இருக்கிறாரா??”
அவள் என்னிடம் விளையாடுகிறாள் என நல்லாவே தெரிந்தது, நான் classல் சாந்த சொரூபி அதை விட அன்று அவ்ளுகளிடம் தனியாக மாட்டிக்கொண்டேன், card markபண்ணுற அக்காவையும் காணவில்லை அவா வந்தா தம்பி என்ன கதை கீழ போங்கோ எண்டு விரட்டி என்னைக்காப்பாற்றி இருப்பார்
அவள் சிரித்துக்கொண்டே ”எனக்காக என்ன செய்வார்???”
“என்ன செய்ய வேணும்?”
“இங்க இருந்து கீழ குதிப்பாரா??”
அலைபாயுதே வந்த feverல் எல்லா நாயும் தன்னை shalini ஆக நினத்துக்கொண்டு பயலுகளை குதிக்கவைப்பதிலேயே குறியாக இருந்தாளுகள். அதுவும் நான் நின்றுகொண்டிருந்தது 2வது மாடி!!!!!!!! அங்கிருந்து குதித்த பிறகு love இருந்தென்ன போய் என்ன???
”கேட்டுப்பார்த்துசொல்லுறன்”
”ஒண்டும் வேணாம் இனிமேல் இப்படி வந்து நிக்காதயுங்கோ” என எனக்கு படிக்கும் காலத்தில் படிப்பதன் மகத்துவம் பற்றி சொன்னாள், கலிகாலம் என் அம்மா கூட எனக்கு advice பண்ணுறதில்லை. எல்லாம் முடிந்து அவனிடம் சென்றேன்
”உது சரிவராது மச்சான் ஏலாதாம்”
“உன்னட்ட ஒரு வேலை சொன்னாள் இப்படித்தான் ஒழுங்கா ஒரு love சொல்ல முடியேல்ல”
எதோ என்னால்தான் rejectஆன மாதிரி build up விட்டான்
நான் அவனை முறைத்தேன் “சரி விடு கோவப்படாத” என்று சொல்லி அடுத்த கிழமையே என்னை மீண்டும் தூது போக சொன்னான். இம்முறை அவன் கவிதையும் எழுதி இருந்தான் நான் பிரித்து வாசித்தேன்
“அன்பே நீ ஒரு பூ
உன் நிறமோ பருப்பூ“
முதலிரண்டு வரிகள் வாசித்தவுடன் எனக்கு அவனை நினைத்து அழுவதா என்னை நினைத்து அழுவதா என்றே தெரியவில்லை!!!!$#@$@#$
பௌர்ணமிக்காக....
17 years ago
No comments:
Post a Comment