மொக்கப்பாண்டி என்பது யாரோ என நினைத்துவிடவேண்டாம், எல்லாம் ஒரு code wordதான் ஆகவே அவர்களைப்பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள மேலே படிக்கவும்
cigarrete தண்ணி அடிக்காமல் நல்ல பிள்ளை image வச்சிருந்தா துண்டு மாட்டிடும் எண்டு கேனைத்தனம்மாக நம்பி இருப்பம், அவளுகளும் நல்லாப்பழகி cute boyஎண்டு சொல்லி hopes எல்லாம் கொடுப்பாளுகள், கடைசியில பார்த்தா ஒரு chain smoker பொடியனுக்குத்தான் எங்களை விட அழகாக இருக்கிறான் என்ற ஒரே காரணத்துக்காக(!!!???!!) setஆவாள், ஏனென்றால் தமிழ் படங்களில் எல்லா heroineம் குடிகார heroக்களை திருத்துபவர்களாக இருப்பதால் junior thrisha, nayanthara, shreya ஆக இதுவே எளிய முயற்சி. பீமா, காக்க காக்க பார்த்த feverல் gymக்கு போனமே அதுபோலத்தான் இதுவும் so.... நடந்ததென்ன எனத்தெரியாமல் classக்கு போவோம் அந்த நண்பன் வந்து துண்டுமாட்டிட்டன் என்றால் யார் என்ன எனக்கேட்காமல் எங்கள் வாழ்த்துமழைகளைப்பொழிந்து பிறகு அது நாங்க line போட்டதுண்டு எனத்தெரிந்ததும் மனதுக்குள் சுனாமி அடிக்க அவனுக்கு கடனாக சிரித்துக்கொண்டே 1000ரூபா கொடுப்பது ஒரு கலை. (1000 ரூபா என்றதும் திகைப்படைய வேண்டாம் முதல் மாதம் மட்டுமே இந்த செலவு பிறகு செல்ல செல்ல வாரம் ஒருமுறை royalbeakery மாதம் ஒருமுறை roxy concord மற்ற நேரங்களில் இருக்கவே இருக்கிறது wellawatte beach என செலவைக்கட்டுப்படுத்தி love பண்ணுவது ஒரு பெரிய விடயமே இல்லை....ஆனால் குறைந்த budgetல் துண்டு maintain பண்ணுவது local sector தமிழ் துண்டுகளிடம் மட்டுமே செல்லுபடியாகும் இதை எல்லாம் சிங்கள துண்டுகளிடம் use பண்ணினால் சின்னப்புள்ளத்தனமாக இருக்கும்)
1000 ரூபாவில் எங்கள் கண் முன்னாலேயே rolls cokeஎன உள்ளே தள்ளி கெக்கே பிக்கே என சிரித்துப்பேசும்போது ”அடியேய் எல்லாம் என் காசுடி” எனக்கத்த தோன்றினாலும் மனதை ஆசுவாசப்படுத்தி mood changeக்கு படத்துக்குப்போவோம், intervalக்கு எழும்பும்போதுதான் அந்த நாயும் துண்டுடன் பின் seatல் இருந்தது தெரியும், அவள் சட்டையின் மேல் பொத்தான்களை மீண்டும் போடுவதும் முதுகுக்குப்பின்னால் கைவிட்டு உள்ளாடைகளை கொஞ்சம் சரி செய்வதும் என கண்கொள்ளாக்காட்சிகளைக்காணும் போது அவன் எங்களைப்பார்த்து சிரித்துக்கொண்டு ”என்ன மச்சான் இந்தப்பக்கம்” என்பான், அப்போது எங்கள் இதயம் போகும் போக்கை நான் சொல்லியா தெரிய வேண்டும்!!!!! சரி என interval முடிந்து திரும்பி படம் பார்க்கதொடங்கியதும் கண் மட்டுமே screenஐப்பார்க்கும் இதர புலன்கள் பின் seatல் இருக்கும். அவளின் சிணுங்கல்களும் முனகல்கலும் முத்தச்சத்தங்களும் dtsஐயும் மீறி எங்களுக்கு கேட்கும். (கற்பழிப்புக்காட்சிகள் வந்தால் தொலைந்தோம், பின்னால் இருக்கிற நாய்கள் மூடுக்கு வந்து -------அவளின் கைகள் எங்கள் மேலே கூட விழும், படம் முடிந்ததும் மன்னிப்பும் கேட்பாள்)தாங்கமுடியாமல் படத்தின் சோகக்காட்சியிலோ யாரோ ஒருவர் screenல் அடிபடும்போதோ எங்களையும் மீறி கண்ணீர் வரும்போது பக்கத்திலிருக்கும் நண்பன் உண்மையிலேயே படத்தோடு ஒன்றி கண்ணீர் விட்டுக்கடுப்பேற்றுவான்.
எதேச்சையாக beech பக்கம் போகும் போது அவர்கள் இருவரும் கட்டிப்பிடித்துக்கொண்டிருப்பது, விகாரை lane மற்றும் வெள்ளவத்தை பெரிய அரச மரங்களுக்குப்பின்னால் அவர்கள் முத்தமிட்டுக்கொண்டிருப்பது போன்ற காட்சிகளை கண்டு நொந்து noodles ஆகி கோவிலுக்குப்போய் கும்பிட்டால் பிள்ளையார் சிரித்துக்கொண்டிருப்பார், சரி எங்கும் போகாமல் வீட்டில் இருப்போம் என்று பார்த்தால் அந்த seasonல் தான்shakthi tvல் ராமராஜன், டி.ராஜேந்தர், ராஜ்கிரண் நடித்த மாட்டுக்காரன் காதல் ,பாட்டுக்காரன் காதல், godzilla காதல் என காட்டுவான். இதை விட பெரிய கூத்து என்னவென்றால் எனக்கு தெரிந்த ஒரு பெண் ஒவ்வொரு வியாழனும் கோவில் செல்வாள், குடும்பமே ஒரு பக்திப்பழம், கொஞ்சம் பெரிய பக்திப்பழம்....பக்திப்பலாப்பழம் என்று வைத்துக்கொள்ளுங்களேன் அவள் bf அவளுடன் வெளியில் சுற்றுவதற்காக வயதுக்கு வந்தவர்கள் மட்டும் வகைப்படங்களை downloadசெய்து cdயில் write பண்ணி அதை yr 8 and below பொடியளுக்கு விற்று காசு சேர்த்து அவளை ஒவ்வொரு வியாழனும் கோவிலில் pickup பண்ணி ஊர் சுற்றுவான் , என்னடா இப்படி நடக்குதெண்டு பார்த்தால் அவன் எல்லாம் திருந்தி தண்ணி அடிக்கிறதை விட்டு நல்வழி செல்லத்தொடங்கி இருப்பான்,நாங்கள் அப்போதுதான் குடிப்பருவத்தை அடைந்திருப்போம் சரி துண்டு ஏதோ செய்யுது என நினைத்தால், திடீரென barல் தாடியுடன் இருப்பான். கேட்டால் love failure இப்ப என்னோட அவள் கதைக்கிறதில்ல என சோகப்பாட்டுப்பாடுவான், சரியடா என அவனுக்காக கதைக்கப்போனால் அவள் அப்போதுதான் அவன் குடிப்பான் அது இது என புராணம் பாடுவாள், இதெல்லாம் நடந்தது தானே இப்ப அவன் குடிக்கிறது இல்லை என்றாள் , அம்மாவுக்குப்பிடிக்காது ஆச்சிக்குப்பிடிக்காது என சொல்வாள்(அதற்காக theatreல் நடந்த கூத்தெல்லாம் அம்மாவுக்கு பிடித்தா நடந்தது என கேட்கக்கூடாது , இவை புது bf கிடைத்ததும் பழைய bfஐ கழட்டுவதற்காக வந்த திடீர் ஞானோதயம்).
இதற்கும் மேலாக ஒன்று சொல்வாள் “அவருக்கு நிறைய கெட்டபழக்கம் உங்களை மாதிரி எல்லாம் இல்லை” !!!!நாங்கள் அவனைக்கண்டதே barல்தான் என்றா சொல்லமுடியும்??? நல்ல வேளை இவன் மாட்டினான், இல்லாவிட்டால் எங்களுக்குத்தான் இந்த நிலமை என நினைத்துக்கொண்டு அவனை சாந்தப்படுத்தி...எங்களை இப்படி இக்கட்டில் போடாததற்கு நன்றி என கோவிலில் கும்பிடப்போனால் இப்போதும் அந்த பிள்ளையார் சிரித்துக்கொண்டிருப்பார்!!
இப்போது மொக்கப்பாண்டி யாரென்பது புரிந்திருக்கும்