faisall sir,social studiesக்கு வெள்ளவத்தையில் வெகு பிரபலம், அவர் classன் கடைசி நாள் பெண்களுக்கு முட்டை அடிப்பது ஒரு சம்பிரதாயம், நாங்கள் பின்னால் நாயாய் பேயாய் அலைந்தும் எங்கள் காதலை புரிந்துகொள்ளாத கன்னியர்களுக்கு அதிக முட்டையடி விழும், அநேகமாக பெணகளின் அண்ணன்களோ அப்பாக்களோ வருவது வழக்கம் , வராதவளுகளுக்கு கச்சேரி :).....
எங்கள் batchன் கடைசி நாளும் வந்தது, முட்டையும் மினுமினுப்பன்களும் சகிதம் பயல்களும் ready.... class முடிந்ததும் attack பண்ணத்தொடங்கினோம், அங்கேதான் ஒரு surprise guerilla statergyஐ பெண்கள் பாவித்தனர், நாங்கள் அடித்துக்கொண்டு போக பெண்கள் உள்நோக்கி பல angleகளிலிருந்து ஒரு முனை நோக்கி நகர்ந்தனர் , நாங்களும் உற்சாகத்தின் உச்சத்திலிருந்தோம் ஆனால் அவளுகள் உள்நோக்கி நகர்ந்ததில் முட்டை யார் மீதும் அவ்வளவாக படவில்லை நாங்கள் அவளுகள் முன்னால் குவிந்த நேரம் முட்டை தீர்ந்துவிட்டது, அநியாயம் முட்டை இன்னும் கொஞ்சம் இருந்திருந்தால் என நினைத்தபோது சரவெடி போல நாங்கள் இதுவரை பாவித்த முட்டைகளை விட 2மடங்கு முட்டைகள் குவிந்தது, எங்கள் மேல், ஆம் ஒரே இடத்தில் குவிந்திருந்த எங்கள் மீது துளியும் பிசகாமல் அடிப்பது பெரிய கஷ்டமில்லை, பொறுத்தது போதுமென்று நினைத்த பெண் இனம் எங்கள் batchலா பொங்கி எழ வேண்டும்????
அடி என்றால் சும்மா சொல்லக்கூடாது முட்டையும் தக்காளியும் சேர்ந்து விழுந்தது, முட்டை ஒருவிதமாக மணக்கவே அது அழுகிய முட்டைகள் என தெரிய வந்தது, ஆக முட்டை அழுக ஒரு கிழமையாவது எடுக்குமென்பதால், இவளுகள் இதை எங்களை விட் ந்ல்லா plan பண்ணி இருக்கிறாளுகள் என தெரிந்தது, LC அரக்கி இதை தலமை தாங்கி நடத்தினால் அவள் முகத்தில்தான் எத்தனை மகிழ்ச்சி,அவள் வீசிய ஒரு முட்டை சரியாக vinod முகத்தை பதம் பார்த்தது, அவன்தான் அங்கு maximum damage ஆனவன், ஜனனி வேறு சிரித்துக்கொண்டே மற்றவர்களை encourage பண்ணி முட்டை எறிந்ததாக சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர், சரியென நாங்கள் பொங்கி எழ நினைக்கும் போது police வந்தது, அவனவன் அரக்க பறக்க ஓடி abith வீட்டுக்குள் தஞ்சம் புகுந்தோம்.
அடுத்த நாள் தினக்குரல் ஆசிரியர் தலையங்கத்தில் பிரபல பெண்கள் கல்லூரி மாணவிகள் பற்றியும் முட்டை பற்றியும் குறிப்பிட்டதுடன், ஒரு cartoon ம் வந்தது, எல்லோரும் முட்டை அடித்திருந்தாலும் அதை பத்திரிகை வரையில் கொண்டு சென்றவர்கள் நாங்களே
இதற்கு பதிலடி கொடுக்க எங்கள் பாடசாலை மாணவர்கள் முடிவெடுத்து ஒரு திட்டத்தை வடிவமைத்தனர், அதுதான் எல்லா LC பெட்டைகளுக்கும் முட்டை ink மற்றும் மினுமினுப்பான்களால் OL கடைசி நாளில் அபிழ்ஷேகம் செய்வது, அந்த திட்டம் தவிடு பொடியான கதையும், principal அழுகிய பச்சை முட்டையை வினோத்தை குடிக்க செய்த கதையும், எல்லோரும் royal college வட்டமாக கொண்டு சென்று LC பெட்டைகள் சந்தி சிரிச்ச கதையும், சஞ்சீவன் எழுதியதால் நான் எழுதவில்லை, மேலும் இக்கதை இடம் பெற்ற இடத்தில் நான் இருக்கவில்லை , பலரது வாக்கு மூலம் அடிப்படையிலேயே இக்கதை எழுதப்பட்டது,
பௌர்ணமிக்காக....
17 years ago
No comments:
Post a Comment