இப்படி எல்லாமா ஆசிரியருடன் நடந்து கொள்வார்கள்
11 ஆம் ஆண்டு சாதாரண தர பரீட்சை நெருங்கி கொண்டிருந்த காலம். இருந்தாலும் எமது மாணவர்களின் குறும்புக்கு ஒரு அளவே இல்லாமல் சென்றுகொண்டிருந்தது. எமக்கு தமிழ் படிப்பித்த ஆசிரியர் செல்வி சுந்தரி கதிர்காமதம்பி. குள்ள உருவம். சுருட்டை முடி. ஒரு நைலெக்ஸ் சாரீ கையில் handbag உடன் என்னுமொரு பையும் வைத்திருப்பார். 35 வயது மதிக்கத்தக்க உருவம் என்றாலும் வீரகேசரி பத்திரிகையில் மணமகன் தேவை விளம்பரத்துக்கு கீழ் இவரது விளம்பரமும் பிரசுரிக்க தவறியது இல்லை. இது பல மாணவர்களுக்கு தெரியாத உண்மை. இவரை பாடசாலயில் சந்திக்கவேண்டும் என்றால் இடைவேலைக்கு 15 நிமிடங்களுக்கு முன்னால் சிற்றுண்டி சாலையில் காணலாம். கதிர கதிரா என்று இவரை செல்லமாக மாணவர் குளாம் அழைக்கும்.
நாளுக்கு நாள் ஆசிரியரது கொடுமை தாங்கவில்லை.அன்றும் வழமை போல ப்ராஜெக்ட்க்கு மேல் ப்ராஜெக்ட்ஆக தந்துகொண்டிருந்தாள் எமது ஆசிரியை கதிர்காமத்தம்பி. ஆசிரியருக்கு மிகவும் மரியாதையாக எங்களுக்கு நீங்கள் படிப்பிக்க வேண்டாம் என்று மறைமுகமாக பலவழிகளில் கூறிப்பார்தோம். அவரும் கேட்பதாக தெரியவில்லை. உடனே மாணவர் அணி செயலில் இறங்கியது. எதுக்கும் வழமை போல் ஆபித் முன்நின்றான். என்னதான் கொக்கி வெறித்தனமாக சிலவேலைகளில் எடுப்பட்டலும் ஆசிரியருக்கு அருகில் சற்று மரியாதை போல காட்டி கொள்வான். இங்க தான் நிற்கிறான் ஆபித். இருந்தாலும் தற்கொலை குண்டுதாரி போல் சிலவேளைகளில் மாட்டிவிடுவான்.
ஆபித்தின் கோபத்துக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. உடனே சென்று கதிரா வின் சாரிக்கு ஒரு கரைக்கு நெருப்பு வைத்து விட்டான். ஆனாலும் நல்லவன். உடனேயே அதை அணைத்தும் விட்டான். பின் மனம் கேக்கவில்லை போலும் மீண்டும் சென்று அவருடைய 10 தலைமயிரை எண்ணி கத்திரிக்கோலால் வெட்டிவிட்டான். ஆனாலும் அவன் ஆசிரியருக்கு நன்மை தான் செய்திருந்தான். அவன் வெட்டியது அனைத்துமே நரை முடிகள்.
பின்பு மற்றொரு நாள் தற்செயலாக ஆசிரியர் கொண்டுவரும் மற்றபையை எமது வகுப்பு உளவுத்துறை சோதனை இட்டபொழுது அதிலிருந்து 2 சோடா போத்தல்களை ஆசிரியர் கடத்தி வீட்டுக்கு கொண்டு செல்வது புலனானது. உடனே எமது புலனாய்வு துறை அந்த 2 போத்தல்களையும் பத்திரமாக மீட்டெடுத்தது. அவருக்கு தண்ட பணமாக ஆசிரியரது handbagஇல் இருந்து 40 ரூபாயையும் அவருக்கு தெரியாமல் எடுத்துவிட்டது. அந்தபணத்தில் அன்று மாங்காய் வாங்கி உண்டதும் இந்த அடியேன் இன்னமும் மறக்கவில்லை.
ஆனாலும் எமது நியாயமான போராட்டத்தை ஆசிரியர் கேட்பதாக இல்லை. வீம்பு பிடித்து கொண்டு நின்றார். தனிநபர் போராட்டமாக இருந்தது. மாணவர் போராட்டமாக எழுச்சி பெற்றது. எல்லோரும் கூடி ஆராய்ந்து பின் ஒரு முடிவை எட்டிநோம்.. அது ஆசிரியர் வகுப்புபை விட்டு செல்லும் போது கைதட்டுவது என்று... தினம் தினம் அவரது பாடவேளை முடிந்து அவர்செல்லும் போது நாமும் கைதடடுவோம். அவரும் விடுவதாக இல்லை. மறுநாள் பாடத்துக்கு வந்துவிடுவர். எமக்கும் அவர் மீண்டும் வருவது விரக்தியை ஏற்படுத்தியது. மீண்டும் பலமாக கைதட்டுவோம். அவரும் மறுநாள் வந்துவிடுவார். இப்பொழுது நாம் புதுவித முயற்சில் ஈடுபட்டோம். அவர் செல்லும் போது இறுக்கி கத்துவது என்று...... நாளுக்கு நாள் எமது முயற்ச்சி எறும்பு ஊற கல் தேய்ந்து போல பலன் அளித்தது. இறுதியில் பக்கத்து வகுப்பு மாணவர் துணை கொண்டு எமது போராட்டத்தில் வெற்றி கோண்டோம். ஆனல் இறுதியில் மிளகு கொடுத்து மிளகாய் வாங்கிய கதையாய் போனது. அதனை வரும் வாரங்களில் எழுதுகிறேன். இப்பொழுதும் ஆசிரியரது மணமகன் தேவை விளம்பரம் பத்திரிகையில் வருவதாக ஒரு கேள்வி.......
பௌர்ணமிக்காக....
17 years ago
No comments:
Post a Comment