நான் சீலன் sir classக்கு அங்கொரு இங்கொரு நாளாக tuition போன காலகட்டம், இன்னும் 1st term தானே என்பதால் அம்மாவும் நான் class போகாததை க்ண்டு கொள்ளவில்லை!!! இப்படி நான் classக்கு போகாத நாளில் பார்த்துத்தான் அந்த LCதுண்டு எங்கள் classக்கு வந்திருக்க வேண்டும் , அடுத்த நாளே எங்கள் schoolக்கு செய்தி வந்துவிட்டது, அதுவரை LC துண்டுகளை tuition classல்பார்த்திராததாலும், LC துண்டுகள் பாலும் தேனும் பருகி மற்றைய துண்டுகளை விட செழிப்பாகவும் அழகாகவும் இருப்பார்கள் என நிரூஷன் சொன்ன தகவலாலும் 12 வயதான நமக்கு அந்த LC துண்டை பார்க்கும் ஆவல் மேலிட்டது, சரி சரி அடுத்த சனிக்கிழமை பார்த்துக்கொள்ளலாம் என நினைத்துக்கொண்டு அந்தக்கிழமையும் கடத்தினோம்......சனிக்கிழமையும் வந்தது.
10.30 classக்கு நான் 7மணிக்கே குளிக்கப்போய்விட்டேன், அம்மா இரண்டாம் முறையும் கதவு தட்டி ”போதும் வா சளி பிடிக்கப்போகுது” என சொன்ன பிறகே நான் குளித்து முடித்தேன், சரி என பரதேசி போல் போகாமல் கொஞ்சம் ஒழுங்காய் போனேன். அங்கு classக்கு போய் பார்த்தால் எல்லா பரதேசியும் ஒழுங்காக வந்திருந்தது....சரியடா என கறுவியபடியே முதல் batch முடிய மட்டும் காத்திருந்தேன். அப்போது அந்த LC துண்டும் வந்தது......
பெரிய நெற்றி, சுருள்ந்த கேசம், நிரூ சொன்னது போல நிதமும் பால் குடிப்பவள் நிறத்தில்தான் இருந்தாள்!!!! அதற்கு முன்னும் தமிழ் classல் இவளை ஒத்த நிறத்தில் ஒரு அழகான பெண் இருந்தாலும் , இவளைப்போல் அவளும் பால் தேன் குடிப்பாள் என நினைக்கத்தோன்றவில்லை!!!
classக்கு வந்தவுடனேயே அங்கிருந்த ஒரு மாணவியிடம்"R u guys waiting for the 10.30 class??" என சீலன் sir classல் முதல் முறையாக english பேசும் கலாச்சாரத்தை புகுத்திய பெருமை அவளையே சாரும்!!!!! முன்னால் இருந்த மாணவன் அவள் english எப்படி என்பது போல் என்னை ஒரு பார்வை பார்த்தான்....
classக்கு வந்ததிலிருந்து அவள் நிலத்தையும் கொப்பியையும் சீலனையும் தவிர வேறு எதையுமே பார்க்கவில்லை!!!ஒரே ஒருமுறை அவள் விழுந்த peniclஐ நான் எடுத்த போது , களவாணியோ போன்றதொரு பார்வை பார்த்தாள்....நான் pencilஐ திருப்பி அதே இடத்தில் வைத்துவிட்டேன்...ஒரு thankyou அவ்வளவுதான்... சரி என்று schoolக்கு தகவல் சொல்லப்போனால் அதற்க்குள்ளாகவே எங்கள் schoolல் அதே classக்கு வரும் இருவர் அந்த பெண்ணுக்கு line போட தொடங்கிவிட்டனர், அங்கு classroom இரண்டுபட்டது....அவள் என்னைப்பார்த்தால் என அவனும் என்னைப்பார்த்து சிரித்தாள் என இவனும் சண்டையைத்தொடங்கினர்!!!!
இந்த சண்டை இப்படி தொடர்ந்த போதுதான் நானும் சீலனிடம் போவதை ந்றுத்திக்கொண்டேன், அந்த மன்மதர்கள் இருவருக்கும் class roomக்குள் வாய்த்தர்க்கமாய் இருந்த சண்டை அவர்களில் ஒருவன் அவளிடம் “பென்சில் இருக்கா??” என வினவியதால் ”என் துண்டுடன் உனக்கு என்ன கதை” என்று கைகலப்பாக பரிணாமம் பெற்ற்து, வகுப்பின் சக மாணவர் தலையீட்டால் அந்த பிரச்சனை ஒத்தி வைக்கப்பட்டது.......
ஒரு முறை நான் schoolக்கு மட்டம் போட்டுவிட்டு அடுத்த நாள் schoolக்கு போனால் அங்கே என் table இரண்டாய் பிளந்திருந்தது!!!! அதற்கான காரணம் என்க்கு ஒரு படம் என தெரிந்தது....நான் வராததால் அவர்களில் ஒருவன் என் இடத்தில் இருந்ததாயும் அவன் அந்த பெண்ணின் படத்தை மேசையில் வரைந்ததாலும் சண்டை வலுத்து இறுதியாக என் மேசை உடைந்தது தெரிய வந்தது :(
நான் அவன் வரைந்த படத்தை கூர்ந்து கவனித்தேன்!!! sleeveless uniform அணிந்த ஒரு பெண்ணைக்கீறி “அ---யா” என எழுதி இருந்தான் ,,,,,, அவன் வரைந்த படம் அ--யா போல் அல்லாமல் யாரோ ஒரு அகோரி போல இருந்ததாலும் இந்த வரைதலுக்காய் என் மேசையை பலி கொடுத்தது நியாயமா என ஒரு கேள்வி உதித்தது. :)
anyway அதன்பின் கணா sir வந்து முன் பின் விசாரிக்காமல் என் பிடரியில் ஒரு இடி இடித்தார்!!! அது அவருக்கு மிகவும் பிடித்த விளையாட்டு!!! என் நல்ல வேளை பாலராஜன் எழும்பி....”sir அவன் நேற்று வரவில்லை” என சொல்லி என்னைக்காப்பாற்றினான்... அதன் பின் line போட்ட இருவரும் அவர்களின் சண்டையைப்படிப்படியாக குறைத்துக்கொண்டனர்.... அவள் இருவருக்கும் கிடைக்கும் சாத்தியக்கூறுகள் தென்படவில்லை போலும்...
பல வருடங்களின் பின் நான் அதே துண்டை மணியம் sir physics classல் பார்த்தேன்....இன்னொரு LC பெண்ணுடன் வந்திருந்தாள்.....என்னை அடையாளம் கண்டு கொண்டவள் போல ஒரு புன்சிரிப்பை உதிர்த்த போது என் பிடரி ஏனோ வலித்தது :)
பௌர்ணமிக்காக....
17 years ago
No comments:
Post a Comment