ஜீவா facebook இல் எழுதும் பொது எனக்கும் ஏதாவது எழுத வேண்டும் போல உள் உணர்வு ஏற்படும். என் இனிய நாட்களை மீண்டும் மீட்கிறேன். என் முதல் நாள் பள்ளி, பல கனவுகளுடன் புத்தக பையை துக்கி கொண்டு சென்றேன். வருட தொடக்க வாரம் பாடங்கள் எதுவும் நடப்பதில்லை.காலை எட்டு மணிக்கு பாடசாலை கீதத்தை பாடி முடித்துவிட்டால் மீண்டும்
மதியம் ஒரு மணிக்கு மீண்டும் படும் வரை அனைவரும் குறிக்கோள் விளையாட்டு. அப்பாவின் விருப்பில் வெறுப்புடன் வழமையாக பாடசாலை செல்லும் நான் வழமைக்கு மாறாக மிகவும் மகிழ்ச்சியுடன் பாடசாலைக்கு வீட்டில் இருந்து கிளம்புகிறேன். ஆனால் நான் அறிந்திருக்கவில்லை அன்று எனக்கு சனி விளையாட போகிறது என்பதை.....
அன்றும் பாடசாலை கீதத்தை பாடி முடித்த பிறகு எமது வழமையான பணிக்கு அனைவரும் திரும்புகிறோம். ஒருவன் பந்தை எடுத்தான். நான் மட்டையை எடுத்தேன்.
விறுவிறுப்பாக விளையாட்டு நடந்துகொண்டிருந்தது. தீடீர் எண்டு கொக்கி "கணா கணா" என்று கத்தி கொண்டு வகுப்பறைக்குள் ஓடிச்சென்றான். கண்முடி முழிப்பதற்குள் அனைவரும் அவர் அவர் ஆசனத்தில் இருந்தனர்.
அந்த மறுபக்கத்தில் அங்கே ஒரு கரிய உருவம். சுருட்டை முடி. தொப்பை வண்டி. இடுப்பில் கைகள் என என் அருகே அந்த உருவம். புதுமாணவன் நான் அங்கு அப்பாவியாக நின்று கொண்டிருந்தேன். புதுவருட பிறப்புக்கு பட்டாசு வெடிக்கும் போது கண்வெட்டாமல் வெடிக்கும் பட்டாசை பார்த்து ரசிப்பது போல என் நண்பர்கள் அனைவரும் என்னை கண்வெட்டாமல் பார்த்துகொண்டிருந்தனர். நானும் என் அருகே நிப்பவரின் அருமை தெரியாமல் அவரை பார்ர்த்துக்கொண்டு நின்றேன். ஒரு கணப்பொழுதில் எல்லாம் முடிந்திருந்தது. நான் அங்கு விறைத்து போய் நிண்டுகொன்டிருந்தேன். நான் அழவில்லை. அனால் கண்கள் கலங்கி இருந்தன என் நண்பர்களின் முகத்தில் தாம் எதிர்பார்த்த ஒன்றை கண்ட திருப்த்தி.
அந்த கணப்பொழுதில் நடந்தது என்ன ??
நான் : ஆய்போவன் ஸார்
கா : நாயே!! உனக்கு ஆய்போவன் கேக்குது எந்த கிளாஸ் நீ நாயே ?
நான் : (இருந்த வகுப்பறையை காட்டி) இந்த கிளாஸ் தன் ஸார்
அவரது குரலின் தோணி தான் என்னை அங்கு விறைக்க வைத்து.
கா : எங்க இஎருந்து நாயே.... இங்கு வந்தனி அந்த ஸ்கூல் லையே படிச்சிருக்கலாமே.... ஏன் நாயே நீ இங்க வந்தனி.......
அப்போது தான் அந்த எதிர்பாரத சம்பவம் நடந்தது. உண்மையில் எனக்கு அது புதுசு
என் நண்பர்கள் அனைவரும் எதிர்பாத்து. என் கன்னத்தில் அவரது 5 விரல்களும் இருந்தது. உண்மை புரிய எனக்கு சில விநாடிகள் எடுத்தது . அன்று எனக்கு பிள்ளயார் சுழி போட்டு தொடக்கி வைத்தார், நான் திருந்துவதற்கு அல்ல. அடி வாங்குவதற்கு.......
பின்பு என்னை காணும் பொழுதெல்லாம் அவருக்கு ஒரு சந்தோசம்... அடி வாங்குவதற்கு ஒருவன் கிடைத்த மாதிரி. றோயல் கல்லுரி வாழ்க்கையின் முதல் படி கணாவின் அடி.........................
பின்பு தான் அவர் எனக்கு வரலாறு படிப்பிக்க போகும் ஆசிரியர் எண்டு அறிந்து கொண்டேன். அவர் எங்ளுக்கு படிப்பித்தது நாம் செய்த தவம்..........
ஒன்றை மட்டும் உறுதியுடன் அறுதியும் அக கூறிகொள்ள விரும்புகிறேன். யாரவது அவரிடம் அடி வாங்காமல் றோயல் கல்லுரியில் படித்திருந்தால் அது வீண்
பௌர்ணமிக்காக....
17 years ago
No comments:
Post a Comment