Saturday, March 14, 2009

அழைப்பிதழ் :)

"we rockd those days ddnt we"......."we were a bunch of nuts"........"awww we were the best click men" இவை யாவும் நான் என் batch girlsன் group picturesன் கீழ் கண்ட comments, அவை அநேகமாக பள்ளிநாட்களின் புகைப்படமாகவோ அல்லது சமீபத்தைய get to gether புகைப்படங்களாகவோ இருக்கக்கூடும். இதைப்பார்க்கும் தம்பிமார் “இந்த அக்காக்கள் எவ்வளவு நல்லம் எங்கள் batchல் வந்திருக்கிறாளுகளே ”என்றும் 05 batch அண்ணாமார் lucky என்றும் நினைக்ககூடும் எனதருமை தம்பிமாரே உங்கள் batchக்கு சற்றும் சளைத்தவர்களல்ல எங்கள் batch பெண்கள், அவர்களும் நிலத்தையும் sirஐயும் கொப்பிஐயும் மட்டுமே பார்க்கும் வித்தையை அறிந்தவர்கள்...உங்கள் batch பெண்களும் இவர்களைப்போலவே இன்னும் சில ஆண்டுகளில் photo comments போடுவது நிதர்சனம்...நம்புங்கள் என் profileல் உள்ள பல பெண்கள் வருடக்கணக்காக என்னுடன் படித்திருந்தாலும் அவர்களின் குரல் வளத்தை அறியாதவன் நான்!!! எங்கள் batch LC மாணவிகள் சமீபத்தில் நடந்த தோழியின் திருமண வீட்டில் ஆடிய குத்தாட்டப்புகைப்படங்களைப்பார்த்ததன் பின் மீண்டும் நான் வழமைபோல் சாப்பிடுவதற்கு மூன்று நாட்கள் பிடித்தன.....மிதமிஞ்சிய அதிர்ச்சியின் விளைவது, ஆகவே எதோ பாரதி கண்ட புதுமைப்பெண்கள் வாழ்ந்த batch என நினைத்து இனிமேல் என்னுடன் யாரும் chat பண்ண வேண்டாம், மனம் புண்ணாகிறது....

அதற்காக எல்லாப்பெண்களும் அப்படி இருந்துவிடவில்லை , சகஜமாக சிரித்துப்பேசும் பெண்களும் பத்ரகாளிகளும் ஒருங்கே இணைந்திருந்தார்கள், ஒரு பெண்ணிடம் love letterநீட்டி அவள் அவனை கெட்ட வார்த்தையால் திட்டியது இங்கு பலருக்கு நினைவிருக்கலாம் ஆனால் அவள் என்னுடன் science class வந்தாள் எப்போதும் என்னுடன் friendly ஆக சிரித்துப்பேசுவாள்..ஒருவேளை நான் கடிதம் கொடுக்காததால்தான் அந்த மரியாதையோ தெரியவில்லை :)

சரி இப்போது எங்கள் batchன் status updateக்கு விதி விலக்கான பெண்ணைப்பற்றிய சம்பவம் இது......royal college கலைவிழா invitationஐ கொடுத்து அவளையும் கலைவிழாவிற்கு அழைக்கவேண்டும் என்பது அவளுக்கு line போட்ட என் நண்பனின் அவா ,”டேய் அவள் கூப்பிட்டால் வரமாட்டாளடா” என நான் கூறினேன், அவனும் அதை ஆமோதித்து திட்டத்தைக்கைவிடும் பட்சத்தில் பக்கத்தில் இருந்தவன் உசுப்பேற்றினான் ”இல்ல மச்சான் அவளுக்கு உன் மேல interest இருக்கு சொல்லுறதற்கு வெக்கப்படுறாள்” என்றான் , இதை அவள் உன்னிடம் சொன்னாலா என நான் கேட்டபோது இவன் பார்க்காதபோது அவள் பார்த்தாள் என்றும் போன திங்களுக்கு முதல் திங்கள் இவனைப்பார்த்து சிரித்தாள் என்றும் சும்மா இருந்தவனை உசுப்பேற்றிவிட்டான். என் நண்பனோ கேட்டாய் தானே பார்த்தாய் தானே என்றான் அதன் பின் என் நியாயபூர்வமான வாதம் எடுபடவில்லை

நானும் சரி எதோ உன் தலையில் சனி விளையாடுது போல என சொல்லிக்கொண்டு நீ போய்க்கொடு என அவனிடம் invitationஐ நீட்டின்னேன், காலக்கொடுமை அவன் வெட்கப்பட்டான், ”இல்ல மச்சான் நான் publicல குடுக்கஏலாது நீ கொடு” என்றான் ,அவனவன் publicல kiss அடிக்கும் காலத்தில் இவன் invitation கொடுக்க தர்மசங்கடப்பட்டான் , சரியடா என நான் போனேன் அவன் சும்மா துணைக்கு வந்தான் , நான் போய் அவளிடம் invitation நீட்டியபோது திரு திரு வென முழித்தாள், நானும் சிரித்துக்கொண்டே நாளைக்கு எங்கட கலைவிழா என்றேன் அவளின் முகம் சிவந்து போய் பக்கத்திலிருந்தவளிடம் “என்னடி என்னவாம் ” என்றாள் , நான் அவளுக்கு காது பழுதோ என நினைத்தபோதுதான் பார்த்தேன் கால் விரல் கோலம் போடுகிறது...வெட்கமாம் அதைப்பார்த்து என் பக்கத்தில் இருந்த நாயகன் சூடானான், ”அடேய் எப்படியாவது கொடு” என்றான், சரி என்று நானும் ”கலைவிழா நல்லா இருக்கும் வரோனும்” என்றேன் , அவளோ “இல்ல பாருங்கோ படிக்க இருக்கு” என்றாள், எனக்கு மூளையில் சம்மட்டியால் அடித்தது போலிருந்தது நான் படிக்காமல் ஊர் சுற்றுகிறேன் என சொல்கிறாளா என பார்த்தேன் அவள் முகம் அதைச்சொல்லவில்லை, அவள் சிணுங்கினாள் இல்லை என்றாள் அவள் தோழி கதைத்தால், ” சனியனே வந்தால் வா வராட்டி விடு இப்போதைக்கு invitationஐ வாங்கித்தொலை” என கத்த வேண்டும் போல இருந்தது . பக்கத்திலிருந்தவன் உருகி மருகியதாலும் அவையடக்கம் கருதியும் நான் அதை சொல்லவில்லை , கடைசியாக வாங்கும்போது “try பண்ணுறன்” என்றாள், எனக்கு அவள் வருவாள் என நம்பிக்கை இருக்கவில்லை

ஆனால் வந்தாள் , எனக்கோ ஆச்சரியம், அவனோ எப்படி என்பது போல பார்த்தான் , ஆனால் அதற்குப்பிறகுதான் விதி விளையாடியது ,அவள் அவளது தோழியுடன் வந்திருந்தால் தோழியோ தன் காதலனையும் அவன் நண்பனையும் அழைத்து வந்தாள்...எனக்கு நடக்கப்போவது என்ன எனத்தெரிந்தது, imran khanம் சொன்னான் மச்சான் அவளுக்கு அவனும் line அவள் அம்மாவோட கன இடம் வாரதால set ஆகிறது கஷ்டமாய் இருந்தது , இப்ப தனிய அவை நாலு பேரும்தான் set ஆகலாம் என்று, கஷ்டப்பட்டு invitation கொடுக்க சொன்னவன் அங்கே மாய்ந்து மாய்ந்து commitee வேலை செய்தான், அவள் தோழி interval உடன் தன் காதலனுடன் வெளியே போனாள் அவர்கள் காதல் வீட்டில் தெரியக்கூடாதென்று அவள் கலைவிழாவுக்கு வந்ததாகவும் அதனாலேயே தான் வந்ததாகவும் அவள் சொன்னால், தோழி போகும் போது அவளை drop பண்ணி விடும் படி அந்த மற்றவனிடம் சொன்னாள், அதிலிருந்து அவர்கள் innings ஆரம்பம். அவன் வாங்கி கொடுப்பதும் அவள் சாப்பிடுவதும் சிரித்து சிரித்து பேசுவதுமாய் பொழுது போனது, எனக்கோ நேற்று பார்த்த அவளா இவள் என ஒரே ஆச்சர்யம், ஒரு சிணுங்கல் குலுங்கல் தயக்கம் என்பன அறவே இல்லை, துண்டு படிப்படியாக அவன் வலையில் விழுந்தது, அங்கே invitation கொடுத்தவனோ தன் துண்டு தன் கண் முன்னாலேயே அபேஸ் ஆவதைப்பார்த்து இரத்தக்கண்ணீர் வடித்தான். ஹ்ம்ம்ம்ம் எங்க்ளால்தான் என்ன செய்ய முடியும் அவனுக்காக பரிதாபப்படுவதை விட!!!

அவர்கள் இருவரும் விழா முடிந்து நடந்து போன போது அவர்களிடையிலான இடைவெளி குறைந்திருந்தது தற்செயலா அல்லது எனது பிரமையா என்று தெரியவில்லை, சரி என சோகமாக இருந்தவனைத்தேற்ற pubக்கு அழைத்துக்கொண்டு ஒரு நண்பர் குழாம் சென்றது , கொஞ்சம் குடித்தவுடன் எந்நேரமும் கதறி அழுவான் என்றே நினைத்தோம் ஆனால் அவன் என்னை வெறித்துபார்த்தபடி சொன்னான் “மச்சான் இதுக்குப்பேர்தான் சொந்த செலவில சூனியம் வைக்கிறது” உண்மைதான்.

No comments:

Post a Comment